புதன், 10 டிசம்பர், 2008

அய்யா வழி

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறை படிக்க கீழே கிளிக் செய்யவும்

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

பெயரில் ஓர் நகைச்சுவை

புதிய நண்பர் ஒருவர் சேகுவாரா பாண்டியன் அன்று என் பெயரை எழுதி திருமண அழைப்பை நீட்டியபோது ஒரு கணம் மெய் சிலிர்த்துப் போய்விட்டேன் .சேர்முக பாண்டியன் என்ற என் பெயரை இப்படி அழகாக மாற்றமுடியுமா என்று. இப்பெயரையே இனி பயன்படுத்திக்கொள்ளலாமே என்ற எண்ணம் என்னிடம் உருவானது .இது எனக்கு ஓர் இனிய அனுபவம் .

செவ்வாய், 2 டிசம்பர், 2008

பெண் உலகின் கறுப்பின காந்தி

ரோசா பார்க்ஸ் பெண் உலகின் கறுப்பின காந்தி
வெள்ளையர்களால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் நமது இந்திய நாட்டிற்கு ஒரு மகாத்மா காந்தி கிடைத்தார்.அதுபோல அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடந்து வந்த இனவெறியை, எதிர்த்த கறுப்பு மங்கை ரோசா பார்க்ஸ் மூலமாக அங்கு கறுப்பின மக்கள் மீதான ஒடுக்கலுக்கு முடிவு கட்டப்பட்டது.அதற்கு தூண்டுகோலாக இருந்த ஒரு சம்பவத்தை தான் நாம் இப்போது நினைவு கூற இருக்கிறோம்.அதாவது அமெரிக்காவின் இனவெறிச் சட்டத்தில், பேருந்தில் வெள்ளையர் எவரேனும் உட்கார இருக்கை இல்லாமல் நிற்க நேர்ந்தால், உட்கார்ந்திருக்கும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் எழுந்து நின்று இருக்கையை வெள்ளையருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.அதுவே அங்கு நடைமுறையாகவும் இருந்தது. ஒரு நாள் அமெரிக்காவின் அலபாபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரியில், பேருந்தில் உட்கார்ந்திருந்த இருக்கையை நின்று கொண்டு வந்த வெள்ளையருக்கு விட்டுக் கொடுக்க மறுத்த கறுப்பின மங்கை ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்டார்.அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் ரூ.3,500 அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ரோசா பர்க்ஸ் மேல்முறையீடு செய்தார். ரோசா பர்க்சுக்கு ஆதரவாக அலபாமாவைச் சேர்ந்த 40 ஆயிரம் கறுப்பின மக்கள் பேருந்துகளில் செல்வதையேப் புறக்கணித்து அமைதியான வகையில் போராட்டம் செய்தனர்.பேராட்டத்தைத் தொடர, கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அறைகூவல் விடுத்தார்.சுமார் 381 நாட்கள் (ஓராண்டுக்கும் மேலாக) நடத்தப்பட்ட இந்த பேருந்து புறக்கணிப்பினால் போக்குவரத்துத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.பேருந்துகளில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இன ஒடுக்கலுக்கு முடிவு கட்டுமாறு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பளித்தது.வேலையில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான ரோசா பார்க்ஸ் கறுப்பின மக்களின் மகாத்மாவாக திகழ்ந்தார்.அவர் கைது செய்யப்பட்ட தினம் 1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி.குனிய குனிய குட்டிக் கொண்டே இருப்பார்கள் என்ன பழமொழியை அறிந்து, நிமிர்ந்து நின்ற ரோசா பார்க்ஸ் பெண் உலகின் காந்தி.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

அன்பு குறித்து மகாகவி பாரதி

மகாகவி பாரதி அன்பு குறித்து
மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான் .
மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது..
அன்பு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ ஒழிந்து போயிருக்கும் மனித இனம் .
பாரதி இதை நன்கு உணர்ந்தவன்.
அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தான் .
சகமனிதர்களிடமட்டுமின்றிகாக்கைகுருவி களிடமும்அன்புகாட்டியவன்
"அன்பில் சிறந்த தவமில்லை "
"அன்பு தன்னில் செழிக்கும் வையம்"
"அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம் .
"வேட்டை அடிப்பது வில்லாலே அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "
"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை"
"உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் "
என அன்பு பற்றிபறைசற்றியவன் பாரதி .


புதன், 3 செப்டம்பர், 2008

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

  • மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி
  • தமிழால் பலர் பெருமை பெற்றனர் .
  • ஆனால் பாரதியால் தமிழ் பெருமைபெற்றது .
  • கடுந்தமிழ் பன்டிதர்களிடமிருந்து தமிழை மீட்டவன்.
  • பழம்பெருமை பேசிய பாவலர்களிடமிருந்து அவனால் தமிழ் மீண்டது .
  • புதுமையை வெறுத்த பாவாணர் களிடமிருந்து அவனால் தமிழ் வெளியேறி புதிய கற்றைச் சுவாசித்தது .
  • கவிதையா ! அது அறிவாளிகள் படித்து ரசிக்கத்தான் !என்ற மாயத்திரையை விலக்கியவன் பாரதி .
  • பாமரத் தமிழனையும் தமிழ்ச் சுவை அறியவைத்த புதுமைக்கவி .
  • எங்கள் தமிழ் மொழி ! எங்கள் தமிழ் மொழி ! என்று தமிழ் உணர்வு பொங்க ஓங்கி ஒலித்தவன்.
  • தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவ பேராசை கொண்டவன் .
  • வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர் !வாழிய பாரத மணித்திருநாடு !என்று முழங்கிய பாரதி ,
  • மொழி இனப் பற்றை மீறியவன் . தன் பாட்டுத்திறத்தாலே வையத்தை பாலிக்க நினைத்தவன் .
  • த்னி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் !
  • கொடுமை கண்டு கொதிநிலை அடைந்தவன் .
  • வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்தவன்
  • எனவேதான் ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சிஎன ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்த்தவன் .
  • உலகத்துக்கு ஓர் புதுமை இது எனப் பறை சற்றியவன் .
  • உலகம் முழுதும் அப்புரட்சி பரவ என்கி தவித்தவன்.
  • அவனது ஆசைக் கனவுகளாகவே உள்ளது .
  • பாரதி பிடித்த தேர் வடம்நடு வீதியில் கிடக்கிறது .
  • ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே !

திங்கள், 1 செப்டம்பர், 2008

மகாகவி பாரதியாரின் முத்தான கவிதை வரிகள்

எண்ணிய முடிதல் வேண்டும்
நலலவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் .