ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

அன்பு குறித்து மகாகவி பாரதி

மகாகவி பாரதி அன்பு குறித்து
மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான் .
மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது..
அன்பு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ ஒழிந்து போயிருக்கும் மனித இனம் .
பாரதி இதை நன்கு உணர்ந்தவன்.
அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தான் .
சகமனிதர்களிடமட்டுமின்றிகாக்கைகுருவி களிடமும்அன்புகாட்டியவன்
"அன்பில் சிறந்த தவமில்லை "
"அன்பு தன்னில் செழிக்கும் வையம்"
"அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம் .
"வேட்டை அடிப்பது வில்லாலே அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "
"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை"
"உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் "
என அன்பு பற்றிபறைசற்றியவன் பாரதி .


புதன், 3 செப்டம்பர், 2008

மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி

  • மகாகவி பாரதி என் ஆசான்--ஓர் புதுமைக் கவி
  • தமிழால் பலர் பெருமை பெற்றனர் .
  • ஆனால் பாரதியால் தமிழ் பெருமைபெற்றது .
  • கடுந்தமிழ் பன்டிதர்களிடமிருந்து தமிழை மீட்டவன்.
  • பழம்பெருமை பேசிய பாவலர்களிடமிருந்து அவனால் தமிழ் மீண்டது .
  • புதுமையை வெறுத்த பாவாணர் களிடமிருந்து அவனால் தமிழ் வெளியேறி புதிய கற்றைச் சுவாசித்தது .
  • கவிதையா ! அது அறிவாளிகள் படித்து ரசிக்கத்தான் !என்ற மாயத்திரையை விலக்கியவன் பாரதி .
  • பாமரத் தமிழனையும் தமிழ்ச் சுவை அறியவைத்த புதுமைக்கவி .
  • எங்கள் தமிழ் மொழி ! எங்கள் தமிழ் மொழி ! என்று தமிழ் உணர்வு பொங்க ஓங்கி ஒலித்தவன்.
  • தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவ பேராசை கொண்டவன் .
  • வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர் !வாழிய பாரத மணித்திருநாடு !என்று முழங்கிய பாரதி ,
  • மொழி இனப் பற்றை மீறியவன் . தன் பாட்டுத்திறத்தாலே வையத்தை பாலிக்க நினைத்தவன் .
  • த்னி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் !
  • கொடுமை கண்டு கொதிநிலை அடைந்தவன் .
  • வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்தவன்
  • எனவேதான் ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சிஎன ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்த்தவன் .
  • உலகத்துக்கு ஓர் புதுமை இது எனப் பறை சற்றியவன் .
  • உலகம் முழுதும் அப்புரட்சி பரவ என்கி தவித்தவன்.
  • அவனது ஆசைக் கனவுகளாகவே உள்ளது .
  • பாரதி பிடித்த தேர் வடம்நடு வீதியில் கிடக்கிறது .
  • ஊர் கூடித் தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே !

திங்கள், 1 செப்டம்பர், 2008

மகாகவி பாரதியாரின் முத்தான கவிதை வரிகள்

எண்ணிய முடிதல் வேண்டும்
நலலவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் .