புதன், 21 ஜனவரி, 2009

மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி

அ வரிசை”
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண் மிகவிரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
“க வரிசை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித்தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கை கொண்டு வாழ்
கௌவியதை விடேல்
“ச வரிசை”
சரித்திரம் தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல்
“ஞ வரிசை”
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிறு என இன்புறு
ஞேகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல் செய்
த,ந,ப வரிசைகள்
“த வரிசை”
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தை காத்தல் செய்
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
“ந வரிசை
நன்று கருது
நாளெல்லாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்ப்பது கைவிடேல்
“ப வரிசை”
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு
“ம வரிசை”
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங் கொடேல்
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்முறத் தவம்செய்
மோனம் போற்று
மௌட்டியந்தனைக் கொல்
“ய வரிசை”
யவனர் போல் முயற்சி கொள்
யாரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
“ர வரிசை
ரஸத்திலே தேர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்றுணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
“ல வரிசை”
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சி செய்
லீலை இவ்வுலகு
உலுத்தரை இகழ்
உலோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
“வ வரிசை”
வருவதை மகிழ்ந்துண்
வானநூல் பயிற்சி கொள்
விதையினைத் தேர்ந்தெடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு
&&&&&&&&&&